Scrolling recent posts

Monday, April 9, 2012

கிட்னி விற்று ஐ-போன் வாங்கிய சீனத்து இளைஞன்!

வாங் என்ற 17 வயது சீனத்து இளைஞன், தன் கிட்னியை விற்று அதில் கிடைத்த பணத்தினால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைவராலும், மிகவும் விரும்பகூடிய ஐ- போன் மற்றும் ஐ-பேட் வாங்கியிருக்கிறான்.






இப்பொருட்களை வாங்க எப்படி பணம் வந்தது என்று வாங் -கின் தாயார் கேட்ட போது, வாங் தன் கிட்னியை விற்று அதில் கிடைத்த பணத்தினால், வாங்கியதாக தெரிவித்துள்ளான்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  வாங்-கின் தாயார், இச்செய்தியை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார்.


அதன் வீடியோ இணைப்பு 





ஒரு சீன பத்திரிகையின்படி ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிட்னியை எடுத்து வேறு நபருக்கு பொருத்துவதற்காக வாங்கின் கிட்னியை விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் டாக்டரும் கைதாகியிருக்கிறார்.

கிடைக்கபெற்ற தகவலின்படி, கிட்னியை எடுத்து விற்ற நபர், சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை சரி செய்ய இந்த தொழிலில் இறங்கியதாக தெரிகிறது. இச்சம்பவத்தில், அவருக்கு 17.5 லட்சம் கிடைத்ததாகவும், வாங்-கிற்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே கொடுத்திருக்கிறார். மேலும், அவர் ஆபரேஷன் செலவும், டாக்டர் பீசும் கொடுத்திருக்கிறார்.

ஒரு தகவலின்படி, சீனாவில் 15 லட்சம் உடல் மாற்று பாகங்கள் தேவைபடுவதாகவும், ஆனால் வெறும் 10,000 பேருக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கு மாற்று சிகிச்சை நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறது.


###டெக்னாலஜி நமக்கு உதவவே தவிர, அவற்றுக்காக நம்மையே குறை படுத்தி கொள்வது எவ்விதத்தில் சரி? ###

Friday, April 6, 2012

ஜப்பானிய கப்பல் அமெரிக்க கடலோர காவற்படையால் பசிபிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது!

ஏப்ரல் 6 - ஜப்பானிய கப்பல் அமெரிக்க கடலோர காவற்படையால் கடலில் மூழ்கடிக்கப்பட்டது! இக்கப்பல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமியில் கடலில் அடித்து செல்லப்பட்டு தத்தளித்து வந்தது. இதனை அமெரிக்க கடலோர காவற்படை நேற்று மேற்கு அலாஸ்காவின் தென்கிழக்கே 180 மைல் தூரத்தில், இக்கப்பல் சுட்டு மூழ்கடிக்கப்பட்டது! இக்கப்பல் 6000 அடி ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இக்கப்பலின் பெயர் "ரயௌ - உன் மறு" என்றும் இதன் அளவு 164 அடி என்றும் தெரியவந்துள்ளது. இதனை மூழ்கடிக்க சுமார் நான்கு மணி நேரம் எடுத்துகொண்டதாக அமெரிக்க கடலோர காவற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் புகை மண்டலம் பரவி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இக்கப்பல் சமுத்திரத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மிதந்து வந்தும், ஜப்பானிய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது, ஜப்பானிய அரசின் சுனாமி தாக்கியதில் இருந்து இன்னும் மிளாமல் கஷ்டபடுவது நன்கு தெரிகிறது. இந்த  சுனாமியில் சுமார் 15000 பேர் உயிர் இழந்ததுடன் அணு உலையும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடதக்கது.


சுமார் ஐந்து மில்லியன் டன் டேப்ரிஸ் எனும் கப்பல், படகு, வீடு, கார்களில்ருந்து சேதாரமான உலோக/ பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதந்து வருவதாகவும்  தினம்  தினம் பசிபிக் கடலின் கரை ஒதுங்குவதாகவும் தெரிகிறது.






இக்கப்பல் மீன் பிடிப்பதற்க்காக பயன்படுத்தப்பட்டதாகவும், பழுதின் காரணமாக ஸ்க்ரப்பிர்க்காக கரையின் ஓரமாக நங்கூரம் இடப்பட்டிருந்தது. சுனாமியின் காரணமாக இது கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு கட்டுப்பாடின்றி மிதந்து வந்தது. மேலும் இக்கப்பல் பழுதடைந்ததினால் திசை காட்டும் கருவிகள் இன்றி இருந்துள்ளது.


கட்டுப்பாடின்றி மிதந்து வந்ததால், மற்ற போக்குவரத்து கப்பல்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அஞ்சப்படு வந்தது. மேலும் இதில் 7570 லிட்டர் பெட்ரோல் இருப்பதாகவும் அதனால் அதிக சேதங்கள் ஏற்படலாம் என்றும் கருத்தில் கொண்டு இதனை நேற்று அமெரிக்க கடலோர காவற்படையால் மூழ்கடிக்கப்பட்டது.

Thursday, April 5, 2012

எங்கே செல்கிறது தமிழகம்! - விவாகரத்தில், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் முதலிடம்!!!

2010 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் விவாகரத்து அதிகம் பெரும் தம்பதியர்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதில் டெல்லி கடைசி இடத்தை பெற்றுள்ளது.இது சிலருக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். 

மத்திய சுகாதார துறையிடம், திருமண பதிவாளர் அலுவலகத்திலிருந்து சமர்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில்தான் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுளது.


இவ்வறிக்கையின்படி, தமிழ் நாடு 8.8% (முதலிடம்)  , ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா 8.2% (இரண்டாமிடம்), ஓடிஸா 7.2%, இமாச்சல பிரதேசம் 7.1%, மகாராஷ்டிரம் 7% மற்றும் டெல்லி 4.1% (கடைசி) இடம் பிடித்துள்ளன.

2010 படி, இந்தியாவில் அதிக பட்சமாக 57.7% திருமணம் புரிந்தவர்களாகவும், 35.9% திருமணம் செய்யாதவர்கள் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் தான் அதிகமானோர் (45.4%) திருமணம் செய்யாமல் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுளது. 

டெல்லி, பெங்களுரு, மும்பை போன்ற நகரங்களில்தான் இவற்றில் முன்னிலை வகிக்கும் என்றிந்த நமக்கு இது ஒரு அதிர்ச்சியான அறிக்கைதான்! ஆண்  நண்பர்கள் , பெண் நண்பர்கள், லிவிங் டுகெதர் என்ற முறைகள் அங்கே தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே திருமணம் செய்யாமலிருக்க வழி செய்திருக்கும். திருமணம் இல்லாமல் விவாகரத்து எங்கே இருக்கபோகிறது?   




இது வரை செய்தி! 

###

கிழ் உள்ளவை ஏன் விவாகரத்து அதிகம் என்பன பற்றி அடியேன் கருத்து!

  • தம்பதியர்க்கிடையே புரிந்துகொள்ளமை, ஈகோ, ஆணாதிக்கம், பெருகி வரும் கிளப் கலாச்சாரங்கள் போன்றவை இதற்க்கு காரணமாக இருக்கலாம். 
  • வழக்கம் போல் IT மக்கள்தான் இதற்கு காரணம் என்றும் வரலாம். கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக கம்பனிகளும், தொழிற்சாலைகளும் வந்ததால் வேலையின்மை வெகுவாக குறைந்துவிட்டது. இதுவே வெளி மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை தமிழகம் தேடி வரவைக்க காரணமாக இருந்தது. 
  • ஒரு மனிதன் தன் சுய தேவைகளை பூர்த்தி செய்ய பணம் மிகமிக அவசியம். பணம் கிடைத்தபின்தான் அவன் தன் சுதந்திரத்தையே உணர்கிறான். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருக்கும் போது திருமணமானபின், ஏதோ ஒருவகையில் தன்  சுதந்திரத்தை இழக்கிறார்கள். இதுவே நாளுக்குநாள் அதிகமாகி ஒருநாள் வெடித்து விவகாரத்தில் முடிகிறது பின் விவாகரத்து ஆகிறது.
  • மேலும் தற்போதய சூழ்நிலையில் படிப்பு முடித்து, ஒரு நல்ல வேலையில் அமர்ந்து, கொஞ்சம் பணம் சம்பாதித்து வீடு, ஒரு பிளாட், ஒரு கார் என ஆன பின்தான் பலர் கல்யாணமே செய்து கொள்கிறார்கள். இதற்கும் அவர்கள் முப்பதை எட்டி இருப்பர்கள். இந்த வசதிகள் வந்தவுடன் அவர்கள் தானே ராஜா என்று நினைப்பும் வந்து விடும். அதனை வரும் பெண் புரிந்து நடந்தால் அக்குடும்பம் செழிக்கும். அவர் மனைவியும் அவரைப்போலவே இருந்தால் அது விவாகாரத்தில் தான் முடியும். (அப்பெண்ணும் பணிக்கு சென்று பணம் சம்பாதிக்கும்போது, நாம் ஏன் தனியாக வாழ முடியாது என்று வெளியே வந்துவிடுகிறார். இல்லையேல் மேல் பத்தியில் உள்ள சுதந்திரம் அவரை உந்தி பிரிய வைத்துவிடும்)

  • காதல் கல்யாணங்கள் இப்போது அதிக பிரச்சனை இல்லாமல், இப்போது அநேகம் பெற்றோர்கள் ஆதரிக்கிராகள். இங்கே காதலையும், காதல் திருமணத்தையும் நான் குறை சொல்லவில்லை. இங்கே வயது வித்தியாசம் கவனிக்க வேண்டும். அநேகம் பேர் ஒரே வயதும் இல்லை ஒன்றிரண்டு குறைவாக இருப்பவர்கள். பொதுவாகவே ஒரே வயது ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் போது ஆணை விட பெண் நன்கு Mature ஆகி இருப்பாள். இதை அந்த ஆணும் பெண்ணும் நன்கு புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்க்கை இனிக்கும். இல்லையேல் இருவறுக்குமிடையே சண்டை சச்சரவு தான்...முடிவு விவாகரத்து! (இதற்க்க்காகதான் முன்காலத்தில் ஆணை விட பெண்ணிற்கு மூன்றோ இல்லை அதை விட குறைவான வயதுடைய பெண்ணை திருமணம்     செய்து வைக்கப்பட்டது.)
  • பெண்ணுரிமை, பெண்கள் கல்வியறிவு, ஆண்/பெண் சமத்துவம், பெண்களின் இண்டேபெண்டேன்சி ஆகியவை பெண்களை தான் ஆணுக்கும் எவ்வரும் சளைத்தவள் அல்ல என்று நெனைக்க வைக்கும். இதில் எந்த தப்பும் இல்லைதான்! இந்த புரிதல் கணவன் - மனைவிக்கிடையே இருத்தல் மிக அவசியம்! (முன்காலத்தில் பெண்கள் இவற்றினை அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. அதனால் அவர்கள் கணவன் சொல்லே மந்திரம் என்றிருந்தனர். இப்போது அதெல்லாம் மலையேறி போய்விட்டது!)
  • ஆண்களும் தன் மனைவிக்கென்று ஒரு மனம் உண்டு என்றும் அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப சில அட்ஜஸ்ட்மேன்ட்ஸ் செய்தல் வேண்டும். 
  • ஒழுக்கமின்மை / கள்ளத்தொடர்பு / நம்பிக்கையின்மை - இவை நாளுக்குநாள் அதிகரித்து வருவது வருத்தம்தான். கள்ளகாதல் செய்தி இல்லாத செய்திதாளே இல்லை என்றாகிவிட்டது. இவைகளும் ஒருவகையில் விவாகரத்தில் கொண்டு சேர்க்கும். இதில் சோகம் என்னவென்றால் பெரும்பாலும் எவை கொலைகள் வரை கூட செல்வது.
உங்கள் கருத்துகளை பகிரவும். 


கூகுளின் தானியங்கி கார் சோதனை ஓட்டம் வெற்றி! (படங்கள் இணைப்பு)

ஆளில்லா போர் விமானம், ஆட்டோ பைலட் என்பன நாம் ஏற்கனேவே  கேள்வி பட்டிருக்கிறோம் ஆனால் தானியங்கி கார் இதுவரையில் நடைமுறையில் இல்லை. முதன்முதலாக கூகுளே நிறுவனம் இதை 2010ல் இந்த ப்ரொஜெக்டை ஆரம்பிப்பதாக செய்தி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இதனை சோதனை ஓட்டம் நடத்தியதி அது வெற்றியும் பெற்றுவிட்டது.


இந்த கூகுளின் தானியங்கி கார், டோயோடவின் "ப்ரயுஸ்" என்ற காரில் கூகுளின் டேக்நாலாஜியுடன் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொண்டது. இதில் ஸ்டீவ் மகான் எனும் பார்வை இல்லாதவரை (95% பார்வை குறைபாடு )ஓட்டுனர் இருக்கையில் அமரவைத்து இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.


இக்கார் அவரை அவர் வீட்டில் இருந்து அருகில் உள்ள டேகோ பெல் என்ற பாஸ்ட் பூட் உணவகத்திற்கு சென்று, டிரைவ் த்ருவில் உணவு வாங்கி, அங்கிருந்து ட்ரை  க்லீனேர் கடைக்கு சென்று அவருடையை துணியை வாங்கிக்கொண்டு மீண்டும் அவர் வீட்டிற்கு தானாக ஓட்டிசென்றது.


ஸ்டீவ் மகான், கூகுள் பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இக்கார் சோதனை ஓட்டத்தில் பங்கு பெற்றனர்.

இதுபற்றி ஸ்டீவ் மகான் கூறுகையில்,  இது எனக்கு மிக சுதந்திரமான வாழ்க்கையையும், தன்னிச்சையாக எங்கும் செல்லவும் உதவும். மேலும் இது என் வாழ்க்கையின் பெஸ்ட் டிரைவிங் என குறிப்பிட்டார்.

அதற்க்கான வீடியோ இணைப்பு :




இது பற்றி கூகுள் கூறும்போது, இந்த டேக்னலோஜியுடன் காரினை ஓட்டும்போது மிகவும் பாதுக்காப்பானதாகவும், மகிழ்ச்சிகரமானதகவும் இருக்கும்.

இன்னும் நிறைய சோதனைகள் செய்யவேண்டுமென்றும், இதுவரை 200,000 மைல்ஸ் கம்ப்யூட்டர் உதவியுடன் இக்கார் இயக்கப்பட்டுள்ளடாக் கூகுள் அதன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.





காரின் மேல் பாகத்தில் பொருத்தப்பட்ட சுழலும் பாகம், காரின் அருகில் உள்ளவைகளை தொடர்ந்து கண்காணித்து "ஆர்டிபிசியல் இண்டேல்லிஜென்ஸ்" மூலம் ஒரு மனிதனைப்போல் இக்காரினை இயக்க உதவுகிறது.


தானியங்கி காரினை தற்சமயம் எங்கும் ஓட்ட முடியாது. அதற்கு மாகாண சட்டம் இயற்றபடவேண்டும். தற்சமயம் நிவெடா மாகாணத்தில் இச்சட்டம் அனுமதி பெற்றுள்ளது. மற்ற மாகாணங்கள் பின்பற்றும் என்று தெரிகிறது.


கூகுள் மட்டுமில்லாமல், போர்ட், பி எம் யு, மேர்சிடெஸ் மற்றும் ஆடி ஆகிய கார் நிறுவனகள் இம்முறையில் காரினை இயக்க திட்டமிட்டுள்ளன.


தானியங்கி கார்கள் சாலையை அடைய இன்னும் சில வருடங்களே உள்ளன. இது மோட்டார் உலகில் ஒரு புரட்சியை கண்டிப்பாக ஏற்படுத்தும்.



Tuesday, April 3, 2012

அமெரிக்காவில் பறக்கும் கார் - வெற்றிகரமாக பரிசோதனை ஓட்டம்!

அமெரிக்காவின் டேர்ரபிவ்ஜியா என்ற விமான நிறுவனம் பறக்கும் கார் மாதிரியை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கடந்த மார்ச் 23 அன்று நியுயார்க் மாகாணத்தில் உள்ள பிளாட்ஸ்பர்க் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கார் விண்ணில் பறக்கவும், சாலையில் சாதாரண காரைப்போல் ஓடவும் செய்யும்.



இக்கார் இரண்டு பேர் அமரகூடிய இருக்கை வசதியுடன், இறக்கைகளை மடக்கிக்கொண்டு சாதாரண "அன்லீடட் பெட்ரோல்" -ல் சாலையில் சாதாரண காரைபோலவும், இறக்கைகளை விரித்து விண்ணிலும் இயங்கக்கூடியது.


சுமார் எட்டு நிமிடங்கள் இக்கார் 1400 அடி உயரம் வரை பறந்தது. விண்ணில் பறந்தும், சாலையில் ஒட்டியும் இயங்கும் இக்கார் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது என்று இக்காரினை பரிசோதனை ஓட்டம் செய்த டேர்ரபிவ்ஜியாவின் முதன்மை பைலட் பில் மேடீர் கூறியுள்ளார்.


இது பற்றி டேர்ரபிவ்ஜியாவின் COO அன்னா ம்ரசெக் டிட்ரெச் கூறுகையில், இந்த மாதிரி பரிசோதனை ஓட்டம், உற்பத்தி செய்து வெளியிடுமுன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த ஆண்டிற்குள் இக்காரினை வெளியிட இருக்கிறோம் . இதன் விலை அமெரிக்கன் டாலர் 279,000  (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.4 கோடி)ஆக நிர்ணீயக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக $10,000 கட்டி இக்காரினை வாங்கிகொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.


இக்காரினால் காண விரும்புவோர் , தற்சமயம் இக்கார் நியுயார்க் ஆட்டோ ஷோ- வில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை இக்காரினை  நியுயார்க் ஆட்டோ ஷோ- வில் காணலாம்.


Monday, April 2, 2012

சீனாவில் பத்து லட்சத்திற்கும் மேலான குகை வீடுகள்

தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல அழகிய உயரிய கட்டிடங்களை சீனாவில் காண்பது மிக எளிது. அண்மையில் கூட ஒரு பல அடுக்கு ஹோட்டல் ஒன்று ஆறே நாட்களில் கட்டி முடிக்கபட்டுளது. இது ஒலி தடுப்பான், வெப்ப சீரோட்டம்,  மற்றும் நில நடுக்கத்திலிருந்து காக்கும் தன்மை என எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கட்டியுள்ளனர். இந்த பதிவு அதை பற்றி அல்ல என்பதை தலைப்பை பார்த்தே அறீவீர்கள்!

இப்படி சீனா வேகமா முன்னேறிகொண்டிருக்கும் நேரத்திலும் கூட, பண்டைய கால குகை வீடுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன என்பது சற்றே வியப்பை தருகிறது.


சீனாவின் யானான் என்ற பகுதியில் பத்து லட்சத்திற்கும் மேலோனோர் குகை வீடுகளில் வசித்து வருகின்றனர். சில குகை வீடுகள் வெறும் அத்தியாவச தேவைகள் கொண்டதாகவும், சில குகை வீடுகள் அழகானதாகவும், உயர்ந்ததாகவும் உள்ளன.


இங்கு பிறந்து வளர்ந்து படித்த பின், வேலை தேடி அருகே இருக்கும் நகரங்களுக்கு சென்ற பின் தான் இவர்கள் கான்க்ரீட் வீடுகளில் குடி பெயர்கின்றனர். இதில் விந்தை என்னவென்றால், இவர்கள் பணி ஓய்வு பெற்ற பின் மீண்டும் இந்த குகை வீடுகளில் வசிக்கவே விரும்புகின்றனர்.


இந்த குகை வீடுகள் வெயில் காலத்தில் குளுமையாகவும், குளிர் காலத்தில் சூடாகவும் இருப்பதாகவும் மேலும் இந்த குகை வீடுகள் மிக அமைதியாகவும், அபாயகரமற்றதகவும் உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


சீன வரலாற்றில் இந்த குகை வீடுகள் ஓர் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 1930 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் புரட்சியாளர் "மா சே துங்" யானான் குகை வீடுகளில் தங்கி கல் மேஜைகளையும் மண்ணாலான இருக்கைகளையும் பயன்படுத்தியுள்ளார். இவரே முதன் முதலில் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கொண்டு வந்தவராவார்.

மேலும் சீனாவின் தற்போதய உப ஜனாதிபதி "சி ஜின்பிங்" ஷான்சி மாகணத்தில் 7 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இவரே சீனாவின் அடுத்த ஜனதிபதியகவிருக்கிறார்.






மனிதன் முதலில் குகைகளில் தான் வாழ்ந்து வந்தான் பின் நாகரீகம் வளர்ந்த பின் குகையை விட்டு வெளியே வந்து மண்ணாலும், கல்லாலும்  சமவெளிகளில் வீடுகளை கட்டிகொண்டான். இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் குகைகள் உள்ளன. இந்தியாவிலும் குகை வீடுகள் காணபடுகின்றன. ஆனால் சீனாவில் தான் இவை அதிகமா உள்ளன. மேலும் சீனா பண்டய கால வாழ்க்கை முறைகளை தற்போதும் பேணி காத்து வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்

சீனாவில் மொத்தம் 3 கோடிக்கும் மேற்ப்பட்டோர் குகை வீடுகளில் வசிப்பதாக தெரிகிறது.


மூன்று அறைகள் மற்றும் ஒரு கழிப்பறை வசதி கொண்ட குகை வீடு (750 sqft) யானான் பகுதியில் ரூ 23 லட்சத்திற்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு அறை கொண்ட சாதாரண குகை வீடு மாதம் ரூ1500 வாடகை வசூலிக்கபடுகிறது .


மேலும் இந்த வீடுகள் பரம்பரை வழி முறையில் பாதுகாத்து வரப்படுகிறது. ஆகையால் வாடகைக்கு விடப்பதுவது மிக அபூர்வம என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


###இயற்கையை ஒட்டி வாழ்வதும் ஒரு சுகம் தானே!###



மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 94 வது இடம் - முதலிடம் டென்மார்க்!

திங்களன்று பூட்டானில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில், உலக மக்களின் நல்வாழ்க்கை மற்றும் வாழ்க்கை தரத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் மாநாட்டில், உலக நாடுகளில் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை பொருளாதார நிபுணர்கள் ஜான் ஹெல்லிவெல், ரிச்சர்ட் லயர்ட் மற்றும் ஜெப்ரி சச்சேஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

உலகம் முழுதும் வெவ்வேறு குழுக்களால் வெவ்வேறு கேள்விகள் அடிப்படையில் நடந்த சர்வே முறையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியல் மூலம் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மக்களில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 94 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்கள் பிடித்த நாடுகள் பட்டியல்: 

1. டென்மார்க்
2. பின்லாந்த் 
3. நோர்வே
4. நெதர்லாண்ட்ஸ் 
5. கனடா 
6. சுவிட்சர்லாந்து 
7. ஸ்வீடன் 
8. நியூசிலாந்து    
9. ஆஸ்திரேலியா 
10. அயர்லாந்த் 

அமெரிக்கா இப்பட்டியலில் 11 வது இடத்தையும், சீனா 112 வது இடத்தையும் பிடித்துள்ளன.

இவ்வரிசையில், பாகிஸ்தான் 84 வது இடம், பிலிப்பின்ஸ் 103  வது இடம், பங்களாதேஷ் 104 வது இடம், இலங்கை 130  வது இடம், ஆப்கானிஸ்தான் 131  வது இடமும் பிடித்துள்ளன.

மொத்தம் 156 நாடுகளின் பட்டியல் வெளியடப்பட்டது. இதில் கடைசியாக டோகோ இடம் பிடித்துள்ளது. 

கடைசியில் இடம் பெற்ற நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நாடுகள் என்பது குறிப்பிடதக்கது.

###அடுத்த வல்லரசுகள் எனப்படும் சீனா, இந்தியா மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் வாழ்க்கையை போராடியே கழிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி!###