Scrolling recent posts

Saturday, March 31, 2012

விமானம் மோதி பெண் உடல் இரண்டாக துண்டிப்பு:

விமானம் மோதி பெண் உடல் இரண்டாக துண்டிப்பு:

செந்தில் கௌதமன் 

மார்ச் 28, தென் ஆப்பிரிக்காவில் இரண்டு பெண்கள் ரன்வேயை கடக்கும்போது விமானம் ஒன்று தரை இறங்கி அவர்கள் மீது மோதியதில் ஒரு பெண்ணின் உடல் இரண்டாக துண்டிகப்பட்டுவிட்டது. அப்பெண்மணி விமானத்தின் விங்க்ஸ் அவர்மேல் மோதியதில் அவர் உடல் இரண்டாக துண்டிகப்பட்டிருக்கிறது.



அவ்விரு பெண்களும் ரன்வேயின் அடுத்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு போக திடீரென முடிவு செய்து விமானம் வருவதிற்குள் கடந்து விடலாம் என்று முயன்றிருக்கின்றனர் ஆனால் துரதிஷ்டவசமா அவர்கள் நேரம் மிக குறுகியதாக இருந்ததால் அவர்கள் விமானத்தின் முன் சிக்கி இருக்கின்றனர்.

ரோட்ல தான் நம்ம கொஞ்சம் அசால்டா இருப்போம்ன்னு பாத்தா, ஏர்போர்ட் கூடவா!!
 
என்ன கொடுமை சரவணா!!!

Friday, March 30, 2012

ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவோல்டா வின் கார் திருடன் - உண்மை சம்பவம் #3
செந்தில் கௌதமன் 

லாஸ் ஏஞ்செலஸ் - ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் 1970 ம் வருட மெர்சிடேஸ் பென்ஸ் கார் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாண்டா மோனிகா வில் காணமல் போய்விட்டது. அமெரிக்காவில் கார் திருடு போவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்றாலும் இது ஒரு நடிகரின் கார் என்பதாலோ என்னவோ போலீசார் அதிக கவனம் செலுத்தி இதனை கண்டு பிடித்திருக்கிறார்கள். (பொதுவாக கார் காணமல் போனால் போலீசில் புகார் தெரிவித்து பின் அவர்கள் தரும் புகார் பிரதியை காப்பிட்டு நிறுவனத்திற்கு அனுப்பி அதற்குண்டான பணத்தை வாங்கிக்கொள்ளவேண்டும். உங்கள் கார் திரும்ப கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம்.)

1970 ம் வருட மெர்சிடேஸ் பென்ஸ் கார்


அதன் விவரம் இங்கே.

மைகேல் கிரீன் என்பவன் நம்ம ஊர் புதுபேட்டை மாதிரி கார்களை திருடி "சாப் ஷாப்" எனப்படும் பாகங்களை பிரித்து தனித்தனியாக விற்கும் கடையை லாஸ் ஏஞ்செலஸ்-ல் நடத்தி வந்திருக்கிறான். இவன் தான் ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் 1970 ம் வருட மெர்சிடேஸ் பென்ஸ் காரை திருடி அதனை வேறொரு நபருக்கு விற்றுருக்கிறான் (செலிப்ரிட்டி கார்ன்னு அவரும் தெரிஞ்சே வாங்கி இருக்கிறான்). அவன் இது வரை 30 கார்களை திருடி பாகங்களை பிரித்து தனித்தனியாக விற்றிருக்கிறான்.

மைகேல் கிரீன்

ராட்போர்ட்


அவனை கடந்த ஜனவரி மாதம் போலீஸ் பிடித்திருக்கின்றனர். அவனுக்கு இன்று நீதி மன்றத்தில் 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. 

அந்த காரை வாங்கியவனுக்கும் ஒன்றரை வருடம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. 


### எல்லா ஊரும் ஒரே மாதிரிதான்! எல்லா போலிசும் ஒரே மாதிரிதான்! எல்லா திருடனும் ஒரே மாதிரிதான்! போல!### 


சீனத்து சிறப்பு முட்டைகள் - உண்மை சம்பவம் #2
செந்தில் கௌதமன் 

ஈஸ்டர் பண்டிகையின்போது முட்டை கொடுத்து கொண்டாடுவது வழக்கம். (இப்போதெலாம் முட்டை வடிவ பிளாஸ்டிக்கில் ஜெல்லி பீன்ஸ், சாக்லேட் வைப்பது வழக்கமாகி விட்டது). தலைப்புக்கு வருவோம். 

அதாவது சீனாவில் டாங் யாங் நகரில் ஒரு புதுமையான வழக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. கன்னி பையன்களின் (பத்து வயதுக்கு குறைவான சிறுவன்கள்) சிறு நீரை சேகரித்து அதில் முட்டைகளை ஊற வைத்து, பின் சிறுநீரில் வேகவைத்து உண்ணபடுகிறது! (அய்யோட சாமீ ஆளை விடு!)




இதனால் பள்ளிகளில், தனி வீடுகளில் கன்னி பையன்களின் சிறு நீர் சேகரிக்கபடுகிறது. அநேகம் பேர்க்கு ஏன் இதை செய்கிறோம் என்றே தெரியவில்லையாம். இது காலம் காலமாக அம்மக்கள் கடைபிடிக்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது! 

சிலர் இம்முட்டைகளை உண்பதால் கை கால் மூட்டு வலி வருவதில்லை என்றும் நம்புகின்றனர்! 

ஒருவேளை இது நம்ம ஊர் கோமியம் (பசுவின் சிறுநீர்) போலவோ! 

உண்மை சம்பவம் #1

மார்ச் 28 2012 - டெக்சாஸ்-ல 76 வயசு ஸ்டீபென் ஸ்டால்ஸ்-ங்கற தாத்தா, அவரோட ஜேர்மன்-ஷெப்பர்ட் நாய் நடு வீட்ல கக்கா போயிடுச்சேன்னு, மனுஷன் கோவத்துல "எடு துப்பாக்கிய சுடு நாய" -ன்னு பொட்டுன்னு சுட்டுபுட்டாரு!  அத பாத்த இன்னொரு நாய் " லொள்  லொள் " -ன்னு லொள்ள சாரீங்க குரைக்க,  பெருசு "இந்தா ஏய் இந்தா" -ன்னு அந்த நாயையும் சுட்டுபுட்டாரு!. என்னடா "இவ்வளவ்வு சத்தமா கேட்குது" -ணுன்னு உள்ளார இருந்து பாட்டிம்மா வந்து பாத்துட்டு அவங்க "குய்யோ முறையோன்னு" கத்த, நாய் சவுண்ட் -க்கே டென்ஷன் ஆன பெருசு, கட்டின பொண்டாட்டின்னு கூட யோசிக்காம பிஸ்டல பாட்டி பக்கம் திருப்பி "டுமீல் டுமீல்".....பாட்டி காலி....

போலீஸ் வந்ததும் மனுஷன் சுதாரித்து தன் நிலை உணந்து அவரையே சுட்டுக்க ட்ரை பண்ணப்புன்னு பாத்து தோட்டா தீந்து போயிருக்கு! இப்போ போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி ஜெயில்ல இருக்காரு நம்ம தாத்தா!

இத எழுதும்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது...நீங்க கூட கேள்வி பட்டிருப்பீர்கள்!  

சுமார் ரெண்டு வருஷம் இருக்கும் ன்னு நெனைக்கறேன். கலிபோர்னியாவில் நம்ம ஊர்காரர் (ஊட்டி ன்னு நெனைக்கறேன்) குடும்பத்தோட செட்டில் ஆகி ஒரு வீடு வாங்கினாரு. அந்த நேரம் பாத்து மச்சான் குடும்பத்தோட இந்தியாவிலிருந்து கம்பெனி வேலையா அமெரிக்கா வந்திருக்கார். ரொம்ப சந்தோஷமா ரெண்டு குடும்பமும் சேர்ந்து புதுமனை புகுவிழா கொண்டாட, ஏதோ சொத்து பத்தி பேச, அது வாக்கு வாதமா மாறி, அமெரிக்க மாமா சட்டுன்னு துப்பாக்கிய எடுத்து ஒட்டு மொத்த குடும்பத்தையும் காலி பண்ணிட்டாரு....

###துப்பாக்கி என்பது "தற்காப்புக்கு" ஆனா அதை நெறைய பேர் பழி வாங்குவதற்கும், கோபத்தின் உச்சியில் இருப்போர் கோபத்தை தணிக்க எதிரே இருப்பவர் மீதும் பயன்படுத்துகின்றனர்!!! ###

கலியுகம் ம்டா சாமி!!!