Scrolling recent posts

Friday, March 30, 2012

உண்மை சம்பவம் #1

மார்ச் 28 2012 - டெக்சாஸ்-ல 76 வயசு ஸ்டீபென் ஸ்டால்ஸ்-ங்கற தாத்தா, அவரோட ஜேர்மன்-ஷெப்பர்ட் நாய் நடு வீட்ல கக்கா போயிடுச்சேன்னு, மனுஷன் கோவத்துல "எடு துப்பாக்கிய சுடு நாய" -ன்னு பொட்டுன்னு சுட்டுபுட்டாரு!  அத பாத்த இன்னொரு நாய் " லொள்  லொள் " -ன்னு லொள்ள சாரீங்க குரைக்க,  பெருசு "இந்தா ஏய் இந்தா" -ன்னு அந்த நாயையும் சுட்டுபுட்டாரு!. என்னடா "இவ்வளவ்வு சத்தமா கேட்குது" -ணுன்னு உள்ளார இருந்து பாட்டிம்மா வந்து பாத்துட்டு அவங்க "குய்யோ முறையோன்னு" கத்த, நாய் சவுண்ட் -க்கே டென்ஷன் ஆன பெருசு, கட்டின பொண்டாட்டின்னு கூட யோசிக்காம பிஸ்டல பாட்டி பக்கம் திருப்பி "டுமீல் டுமீல்".....பாட்டி காலி....

போலீஸ் வந்ததும் மனுஷன் சுதாரித்து தன் நிலை உணந்து அவரையே சுட்டுக்க ட்ரை பண்ணப்புன்னு பாத்து தோட்டா தீந்து போயிருக்கு! இப்போ போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி ஜெயில்ல இருக்காரு நம்ம தாத்தா!

இத எழுதும்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது...நீங்க கூட கேள்வி பட்டிருப்பீர்கள்!  

சுமார் ரெண்டு வருஷம் இருக்கும் ன்னு நெனைக்கறேன். கலிபோர்னியாவில் நம்ம ஊர்காரர் (ஊட்டி ன்னு நெனைக்கறேன்) குடும்பத்தோட செட்டில் ஆகி ஒரு வீடு வாங்கினாரு. அந்த நேரம் பாத்து மச்சான் குடும்பத்தோட இந்தியாவிலிருந்து கம்பெனி வேலையா அமெரிக்கா வந்திருக்கார். ரொம்ப சந்தோஷமா ரெண்டு குடும்பமும் சேர்ந்து புதுமனை புகுவிழா கொண்டாட, ஏதோ சொத்து பத்தி பேச, அது வாக்கு வாதமா மாறி, அமெரிக்க மாமா சட்டுன்னு துப்பாக்கிய எடுத்து ஒட்டு மொத்த குடும்பத்தையும் காலி பண்ணிட்டாரு....

###துப்பாக்கி என்பது "தற்காப்புக்கு" ஆனா அதை நெறைய பேர் பழி வாங்குவதற்கும், கோபத்தின் உச்சியில் இருப்போர் கோபத்தை தணிக்க எதிரே இருப்பவர் மீதும் பயன்படுத்துகின்றனர்!!! ###

கலியுகம் ம்டா சாமி!!!

No comments:

Post a Comment